யாழில் எறிகணைகள் மீட்பு – குவிக்க பட்ட இராணுவம்
அண்டனி புரத்தில் தனியார் காணியின் உரிமையாளர் தனது
காணியை துப்பரவு செய்யும் போது குறித்த குண்டுகளை கண்டுள்ளார்.
உடனடியாக துப்புரவு பணியை நிறுத்திவிட்டு பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு அறிவித்துள்ளார்.
பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் குறித்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
குண்டுகளை செயலிழப்பதற்காக வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள தரவை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.