முல்லைத்தீவு மருத்துவமனையில் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

Spread the love

முல்லைத்தீவு மருத்துவமனையில் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை வரலாற்றில் முதல் முறையாக கடந்த 12 ஆம் திகதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் பல வளப் பற்றாக்குறைகளுக்கு மத்தியிலும், மருத்துவர்களின் அர்ப்பணிப்புக்கு மத்தியிலும் முதல் முறையாக வெற்றிக்கரமான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மயக்க மருந்து நிபுணர் வைத்தியர் சாந்தருவன் பண்டார ஹெரத் மற்றும் மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் உட்பட யாழ் போதனா வைத்தியசாலை

எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் சுந்தரலிங்கம் சுதர்ஷன் தலைமையிலான குழு உறுப்பினர்களும் இதனை வெற்றிகரமாக செய்துள்ளனர்.

மூட்டு வாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாவட்ட பொது மருத்துவமனையின் சேவைகளை விரிவுபடுத்துவதில் மும்முரமாக இருக்கும் வைத்திய அத்தியட்சகர் மற்றும் வைத்திய குழுவினர் இந்த சாதனைக்கு மத்திய மற்றும் மாகாண

சுகாதார அமைச்சகங்களின் ஆதரவுக்கும், பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளரின் ஆதரவுக்கும் மற்றும் நன்கொடையாளர்களின் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்கள்.

இந்த அறுவை சிகிச்சை வள குறைபாடுகளுடன் எலும்பியல் அறுவை சிகிச்சைக்கு தனி

சத்திரசிகிச்சை கூடம் இல்லாத பொதுவான கிருமிநீக்கம் செய்யப்பட்ட பொது சத்திரசிகிச்சை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *