மரம் முறிந்து வீழ்ந்ததில் இரண்டு பெண்கள் பலி
பலாங்கொடை பின்னவல, வலவேவத்த பிரதேசத்தில் மரம் ஒன்று முறிந்து
வீழ்ந்ததில் இரண்டு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
வலவேவத்த அரச தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறத்து கொண்டிருந்த
பெண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த அவர்கள் பலாங்கொடை வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.