பொல்லால் தாக்கி ஒருவர் கொலை

Spread the love

பொல்லால் தாக்கி ஒருவர் கொலை

தனமல்வில பொலிஸ் பிரிவின் ஊவ குடாஒய பிரதேசத்தில் இரு

தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு நீண்டதில் நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு (22) 7.30 மணியளவில் குறித்த நபருக்கு பொல்லு ஒன்றால் தாக்குதல்

மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, காயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை

வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

34 வயதுடைய ஊவ குடாஒய பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தொடர்பான ஆரம்பகட்ட நீதவான் விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகள் இன்று (23) இடம்பெறவுள்ளன.

சந்தேகநபர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்காக தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply