புலி முக்கியஸ்தர் மனைவி உடல் இன்று தகனம் – கண்ணீரில் மக்கள்

Spread the love

புலி முக்கியஸ்தர் மனைவி உடல் இன்று தகனம் – கண்ணீரில் மக்கள்

விடுதலை புலிகளின் அரசியல் அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு அந்த அமைப்புடன் இணைந்து அரசியல்

பணிகளை முன்னெடுத்து வரும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் சபாநாயரும் ,உறுப்பினரும் , பிரான்சின்

முக்கிய பொறுப்புக்களில் விளங்கியவரும்,தொழில் அதிபாருமாக விளங்கும் நாகலிங்கம் பாலச்சந்திரன் துணைவியார் கொரனோ நோயின்தாக்குதலில் சிக்கி பலியானார்

இவ்வாறு பலியான அவரது இறுதி கிரியை இன்று புதன்கிழமை இடம்பெறுகிறது ,

குடும்ப உறவுகளை மட்டும் அனுமதிக்க பட்டுள்ள நிலையில் இவரது நல்லடக்கம் இடம்பெறுகிறது

விடுதலையின் நேசித்தலுக்கு ,தனது மூச்சை வழங்கி அந்த குடும்ப உறவுகள் தொடர் பணி செய்திட முன் துணையாக விளங்கிய கமலா அவர்கள் எம்மை விட்டு பிரிந்து சென்றுள்ளார் .

அவரது ஆறாத்துயரில் தவிக்கும் குடும்பத்தார் துயரில் நாமும் பங்கெடுத்து கொள்கிறோம் .

ஏன் தவிக்க விட்டாய் …?

நேற்றெங்கள் தோட்டத்து பூவானவள்
நெஞ்சுக்குள் நிற்கின்ற விழியானவள்
அன்புக்கும் பண்புக்கும் உயிரானவள்
அகிலத்தின் நோயதில் பலியானவள் …..

வீம்புக்கு என்றுமே செல்லாதவள்
விடுதலை போருக்கு உயிரானவள் – உடல்
தாங்கிட இன்று முடியலையே – பக்கம்
தங்கிட கூட முடியலையே …

வேருக்கு நீர் வீட்ட குலமகளே
வேணடுறோம் மீள வா மகளே …
அறத்திலே நின்ற பெரு மகளே
அழுகிறோம் விழியை துடை மகளே ….

என்றுன்னை இனி நாங்கள் பார்த்துடுவோம்..?
எப்படி உன்னோடு கூடிடுவோம் …?
தீ வந்து உன் உடலை தீண்டிடவோ ..?
தீ தின்ன உன்னை நாம் பார்த்திடவோ ..?

அழுகிறோம் எம் விழி துடைப்பாயா ..?
ஆறுதல் தந்திடா வாராயா ..?
வேருக்கு நீர் விட்ட பெருமாளே
வேணடுறோம் மீள வந்திடுவாய் …!

கண்ணீருடன் – வன்னி மைந்தன் –

பிரான்சில் புலி முக்கியஸ்தர் மனைவி கொரனோவால் மரணம் read more click here

புலி முக்கியஸ்தர் மனைவி
புலி முக்கியஸ்தர் மனைவி

Leave a Reply