புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர்
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர் ,இன்று காலை புதிய பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின் போது சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
பத்தாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் புதிய சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இலங்கையின் 10வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21) காலை 10.00 மணியளவில் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமானது.
10வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு தொடர்பாக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் திருமதி குஷானி ரோஹணதீர வாசித்த பின்னர் தேசிய மக்கள்
சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக சபுமல் ரன்வல புதிய சபாநாயகராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். பாராளுமன்றம்






