புங்குடுதீவு தற்காலிக முடக்கம் நீக்கம்

Spread the love

புங்குடுதீவு தற்காலிக முடக்கம் நீக்கம்

புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்ட தற்காலிக முடக்கம் இன்று காலை (20.10.2020) நீக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று வாரங்களாக யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதி தற்காலிக முடக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்த நிலையில்

அப்பகுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று

ஏற்படவில்லையென சுகாதாரப் பகுதியினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியானது இன்று காலையிலிருந்து வழமைக்குத் திரும்பும் எனினும் அப்பகுதி மக்கள் சுகாதார நடைமுறையினை

கட்டாயம் பின்பற்ற வேண்டும், அப்பகுதிக்கு சென்று வரும் பொதுமக்களும் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற

வேண்டும் என்றும் குறித்த பகுதியானது சுகாதாரப் பிரிவினரால் தொடர்ச்சியாக

கண்காணிக்கப்படுமெனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *