பாடல் எழுதுவது எப்படி சிறுவிளக்கம்

பாடல் எழுதுவது எப்படி சிறு விளக்கம்
Spread the love

பாடல் எழுதுவது எப்படி சிறுவிளக்கம்

பாடல் எழுதுவது எப்படி சிறுவிளக்கம் பாடல் எழுதுவது ஒரு கலை. அது உங்கள் உணர்வுகளை, எண்ணங்களை, அனுபவங்களை இசையின் வடிவில் வெளிப்படுத்தும் ஒரு வழி:

ஒரு பாடலை எழுதுவதற்கு என்னென்ன அடிப்படையாக தெரியவேண்டும் என பார்த்தால்,

முதலில் தீம் (Theme) தேர்வு செய்யுங்கள்

பாடலின் கருப்பொருள் என்ன என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும்.

அதாவது

காதல், சோகம், சந்தோசம், நம்பிக்கை, சமூக நிலை சார்ந்தது, ஆன்மீகம் தொடர்பானது

ஒரு பாடல் பொதுவாக பல்லவி மற்றும் சரணங்கள் கொண்டது.

பாடலின் கட்டமைப்பு எவ்வாறு இருக்கும்

பாடலின் கட்டமைப்பு எவ்வாறு இருக்குமாயின்,

பல்லவி – பாடலில் மீண்டும் மீண்டும் வரும் பகுதி.

சரணம் – கதை அல்லது உணர்வுக்கு அறிமுகம்.

சரணம் – தொடர்ச்சி / வேறு கோணத்தில் பார்வை.

இப்போ சிம்பிளா ஒரு உதாரணத்தை எடுப்போமானால்,

அனைவராலும் உணரப்படுகின்ற ஒரு காதலை உதாரணத்திற்கு எடுக்கின்றேன்

“ஒரு காதல் பிரிவின் பின்னர் என்ன மனநிலை?”
காதலர்களின் உணர்வுகள் எவ்வாறு இருக்கும்? அதாவது அந்த காதல் பிரிவு எனக்கு நடந்ததாக நான் என்னை உருவகப்படுத்திக் கொள்ளவேண்டும்.

“நீ இல்லாத நாள்கள்,
உயிரில்லா வாசல்கள்…”

பாடலின் முக்கியமான வரி இது. இது மனதில் பதியும் வகையில் எளிமையாகவும், அழகாகவும் இருக்க வேண்டும்.

ஒரு பாடலை எழுதும்போது அதற்கான

தாளம் மற்றும் ஒலி ஒத்திசைவு (Rhythm & Rhyme) அதனை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழில் எழுதும்போது தமிழில் ஒலிக்கச் சரியாக அமைந்த தமிழ்ச் சொற்கள் அதிலும் இலகுவான சொற்கள் மேலும் பாடலை இனிமையாக மாற்றும்.

காற்றே என் காதலன் போல்
தென்றலாய் பேசுகிறாய் நீதான் தோழி போல…

தொடர்ந்து கேட்க இதோ காணொளி வடிவில்….