பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு மஞ்சள் நிறத்தை பயன்படுத்த திட்டம்

Spread the love

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு மஞ்சள் நிறத்தை பயன்படுத்த திட்டம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மஞ்சள் நிறத்தில்

இருப்பதை கட்டாயப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பிரயாணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை

எதிர்காலத்தில் மஞ்சள் நிறத்தில் மாத்திரம் இறக்குமதி செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏனைய வாகனங்கள் இந்த வாகனங்களை இலகுவாக இனங்கண்டு

கொள்ளும் வகையில் இவ்வாறு மஞ்சள் நிறம் பயன்படுத்தப்படும்.

அமைச்சர் மஹிந்த அமரவீர முன்வைத்த யோசனைக்கு பொலிஸ் அதிகாரிகளும்

மாணவர்களை ஏற்றிச் செல்லும் சங்கங்களின் பிரதிநிதிகளும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *