50 கிலோ மீட்டர் வேகத்தில் பலமான காற்று வீசும் – மக்களுக்கு எச்சரிக்கை

சாப்டான இட்லி 10 நிமிடத்தில் சட்டுனு இப்படி செய்து அசத்துங்க - சூப்பரான இட்லிரெடி
Spread the love

50 கிலோ மீட்டர் வேகத்தில் பலமான காற்று வீசும் – மக்களுக்கு எச்சரிக்கை

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும் என்று வளிமண்டலவியல்

திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும்

மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பல தடவைகள்

சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மத்திய

மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோ மீற்றர் வரை

அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. என்றும் இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *