காதல் வந்தது எப்படி …?
நான் நடந்த வீதியில
நீ வந்த வேளையில
நான் தொலைந்து போனேனே
நாயகியை நினைந்தேனே
நீ பேசும் போதெல்லாம்
நித்தம் நான் இரசிக்கிறேன்
நிகழ் காலம் உன் மடியில்
நீண்டுறங்க துடிக்கிறேன்
நாளை என்ற நாளதனை
நான் எண்ண மறுக்கிறேன்
நாடி வந்து உன்னடியில்
நான் கூட துடிக்கிறேன்
சிரிப்பாலே கதை பேசி
சிறை வைத்து போபவளே
என்ன உந்தன் மந்திரமோ
என்னை சுற்ற வைத்த தந்திரமோ …?
வன்னி மைந்தன்
ஆக்கம் 01-02-2021