நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

Spread the love

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டில் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் , காலி மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என்று

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

மேற்கு சப்ரகமுவ மாகாணங்களிலும் மாத்தறை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டர்களுக்கும் அதிகமான மழைபெய்யலாம்.


வடக்கு, கிழக்கு, ஊவா,வடமத்திய, வடமேல்; மத்திய மாகாணங்களின் பல இடங்களில் மாலை நேரத்தில் அல்லது இரவு

வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல்

தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை

மேற்கொள்கொள்ளுமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றர் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *