திருகோணமலை நோக்கி நகரும் புரவி சுறாவளி – மக்களுக்கு கடும் எச்சரிக்கை

Spread the love

திருகோணமலை நோக்கி நகரும் புரவி சுறாவளி – மக்களுக்கு கடும் எச்சரிக்கை

புரவி சுறாவளி இன்று இரவு 7 மணி முதல் 10 மணி வரையான காலப்பகுதிக்குள் கிழக்கு மாகாணத்தில் ஊடாக நகர்ந்து இலங்கையை கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதன்பொது கிழக்கு, வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இடையிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 200 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல், மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 80-90 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *