தியாக தீபம் திலீபனின் நினைவஞ்சலிக்கு தடை
தியாக தீபம் திலீபனின் நினைவஞ்சலிக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தால்
விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு, தொடர்ந்தும் அமலில்
இருக்குமென்று, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்துக்கு விதிக்கப்பட்ட தடைக்கு
எதிராக பிரதிவாதிகள் சட்டத்தரணிகள் ஊடாக பல விண்ணப்பங்கள்
செய்தனர். எனினும் அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டு, பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு தொடர்ந்தும் அமலில் இருக்கும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.