டெல்லியையும் விட்டுவைக்காத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 22132 ஆக அதிகரிப்பு
டெல்லியில் நேற்று மேலும் 1,298 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு
அடைந்தோர் எண்ணிக்கை 22,132 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியையும் விட்டுவைக்காத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 22132 ஆக அதிகரிப்பு
சிகிச்சை பெறும் நோயாளிகள்
சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 72 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நேற்று மேலும் 1,298 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து
அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.132 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை
556 ஆக உயர்ந்துள்ளது என டெல்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.