டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த GMOA முன்மொழிவு
டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த GMOA முன்மொழிவு களைச் சமர்ப்பித்தது
நாட்டில் பரவி வரும் டெங்கு
நாட்டில் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முன்மொழிவுத் தொகுப்பு ஒன்றை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) சமர்ப்பித்துள்ளது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸா மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் புதிதாகத்
தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழுப் பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு ஒன்று சுகாதார அமைச்சில் நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் டாக்டர் சந்திக எபிதகடுவ, செயலாளர் டாக்டர்
பண்டார வரககொட மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு அமைச்சர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இலங்கை மக்களுக்கு உயர்தர மற்றும் வினைத்திறன் மிக்க சுகாதார சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட அமைச்சின் மூலோபாயத்
திட்டங்களைச் செயல்படுத்துவதில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக டாக்டர் ஜயதிஸ்ஸா குறிப்பிட்டார்.
தற்போதைய டெங்கு நிலைமை மற்றும் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் இச்சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. டெங்கு நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதில்
நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள்
நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் தாதியர் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் இரு தரப்பினரும் ஆராய்ந்தனர்.
இதற்கிடையில், நாடு முழுவதும் டெங்கு நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கான சங்கத்தின் பரிந்துரைகளை
உள்ளடக்கிய விசேட அறிக்கை ஒன்றை, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் பண்டார வரககொட சுகாதார அமைச்சரிடம் கையளித்தார்.







