ஜனாதிபதியாக வெற்றிபெரும் சஜித் பிரேமேதாச – மலையக மக்கள்

Spread the love
ஜனாதிபதியாக வெற்றிபெரும் சஜித் பிரேமேதாச அவர்களின் வெற்றியில் மலையக பெண்களின் பங்களிப்பு கட்டாயம் இருக்கும்

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி
அமைச்சர் கலாநிதி வே.இராதாகிருஸ்ணன்

ஜனாதிபதியாக வெற்றி பெரும் சஜித் பிரேமேதாச அவர்களின் வெற்றியில் மலையக பெண்களின் பங்களிப்பு கட்டாயம் இருக்கும். தற்போது கிடைக்கபெற்ற தகவல்களுக்கும் புள்ளி விபரங்களும் வெளிநாடுகளின் முன்னணி கணீப்பீட்டுக்கு அமைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களின் வெற்றி நிச்சயிக்கபட்டுள்ள ஒன்னறாக இருக்கின்றது. இந்த வெற்றிக்கு மலையக பெண்களும் காரணமாக இருந்து உள்ளார்கள் என்ற நிலைக்கு அனைத்து பெண்களும் கட்டாயம் அன்னம் சின்னத்திற்கு வாக்களித்து சஜித் பிரேமதாச அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கூறுகின்றார் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்கள்
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரிக்கும் ஒன்றாய் முன்னோக்கி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் மலையக மக்கள் முன்னணியின் மகளீர் அணியுடனான மாபெரும் ஒன்று கூடல் இன்று (13) ஹட்டனில் அமைந்துள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைமை காரியாலத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மகளீர் முன்னணியின் செயலாளார் திருமதி சுவர்ணலதா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் விரிவுரையாளர் திருமதி விஷாகா புதிய ஜனநாயக முன்னணி மகளீர் இணைப்பாளர் திருமதி ருவனவெல மனிதவள அபிவிருத்தி ஸ்தானப மகளீர் இணைப்பாளர் திருமதி மெட்லின் மேரி உட்பட கட்சியின் உயர் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டார்கள்.

தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் அவர்கள்

மலையத்தில் பெருந்தோட்டங்களில் காணப்படும் வாக்கு வங்கியில் பெரும்பாலன வாக்குகள் பெண்களுக்கு உரியதே. இந்த வாக்குகள் அனைத்தும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு அளிக்கபட வேண்டும். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்கள். இந்த நாட்டில் வாழும் அனைத்து பெண்களின் பாதுகாப்பிற்கும் நல்வாழ்விற்கும் மிகவும் பொருத்தமான பெண்கள் சாசனம் ஒன்றினை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்து உள்ளார். பெண்களின் உரிமை உட்பட பெண்கள் சார்பான நல்ல பல சமூகசார் அபிவிருத்தி விடயங்களையும் முன் வைத்துள்ளார். இந்த நாட்டில் உள்ள சனத்தொகையில் 51 வீதமானோர் பெண்களே. ஆனால் இவர்கள் குறித்து கடந்த காலங்களில் பதவியில் இருந்த ஜனாதிபதிகள் உரிய கவனத்தை செலுத்தவில்லை என்று தான் கூர முடியும். பேச்சுகளுக்கு பலர் பல கூறினாலும் அவை நடைமுறையில் இருப்பதாக தெரியவில்லை. இந்த நாட்டிற்கு பெருமளவிளான வருமானத்தை பெற்றுத் தருபவர்கள் பெண்களே. இலங்கையை பொருத்த வரையில் உயர்பதவிகளுக்கு வருபவர்கள் பெண் அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். அந்த வகையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்கள் பெண் அபிவிருத்தி தொடர்பில் முன்னெடுக்கப்பட உள்ள செயற்திட்டங்கள் பாராட்டதக்க ஒன்றாகும்.

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 60 விகிதத்திற்கு மேற்பட்டவர்கள் பெண்கள். இவர்கள் தங்கள் வாழ்வில் சொல்லன்னா துயரங்களை அடைந்து வருகின்றனர். இவர்களின் அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களின் பெண்கள் தொர்பான உயர்வான அவளுடன் இணைய குற்றங்களில் இருந்து பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க புதிய சட்;டங்களையும் உருவாக்க உள்ளார் அதுவும் வரவேற்க்கதக்க ஒன்றாகும். என்று அவர் மேலும் தெரிவித்தார்

Leave a Reply