சீனக்கப்பல் நவம்பரில் வர அனுமதி
சீன ஆராய்ச்சிக் கப்பல் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்வொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் ”சீன கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, எனினும் கப்பல் ஒக்டோபர் மாதத்தில் வரமுடியாது ,நவம்பர் மாதத்தில் தான் வரமுடியும்” எனவும் தெரிவித்துள்ளார்.
சீனக்கப்பல் நவம்பரில் வர அனுமதி
”குறித்த கப்பல் நவம்பர் மாதத்திலேயே இலங்கை வரமுடியும் என்பது குறித்து அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது .
இது வெறுமனே ஒரு விஜயம் மாத்திரம் இல்லை . கப்பல் இலங்கையில் தரித்து நிற்கும் நாட்களில் அதற்கான அனைத்து வசதிகளையும் இலங்கை வழங்கவேண்டும்.
உள்விவகாரங்களை கருத்தில் கொண்ட பின்னர் கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வருவதற்கான திகதியை வழங்கியுள்ளோம். இலங்கைக்கு சீனாவுடனான இருதரப்பு உறவுகள் மிகவும் அவசியமானவை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன
- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை
- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி
- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது
- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு
- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி
- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை
- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு
- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்
- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்
















