ஏன் என்னை சிறையில் வைத்தாய் ..?

Spread the love

ஏன் என்னை சிறையில் வைத்தாய் ..?

உன்னை கண்டால் பேச்சிழக்கும்
உதடும் காய்ந்து போகும்
வீங்கி முட்டி மூச்சிளைக்கும்
வியர்வை உடல் நனைக்கும்

ஏனோ தெரியவில்லை நீ வந்தால்
ஏறி மனம் குதிக்கும்
ஏகாந்த பெரு வெளியிலும்
ஏழ்மை சிரிக்கும்

வட்ட நிலா உடல் அழகு
வாலிபத்தில தேயுது
வந்து பேச தமிழும்
வையத்தில வெட்குது

கொண்டையில மல்லிகை பூ
கொலுசு சத்தம் போடுது
சண்டையிட்ட தோட்டாக்கள் – உன்
சாளரத்தில் தோற்குது

ஏய் பிரம்மா ஏன் படைத்தாய்
ஏன் பின்னால் சுற்ற வைத்தாய்
உன்னாலே நான் தவித்தேன்
உயிரே ஏன் சிறை வைத்தாய் ….!

வன்னி மைந்தன்
ஆக்கம் 19-11-2021

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *