சிகிரியா – சுற்றுலாப்பயணிகளின் பார்வைக்காக திறப்பு
கொரோனா தொற்றின் காரணமாக மூடப்பட்டிருந்த சிகிரியா 3
மாதத்திற்கு பின்னர் உள்ளூர் சுற்றுலாப்பயணிகளுக்காக மீண்டும்
திறக்கப்பட்டுள்ளது.
சிகிரியா தொல் பொருள் பிரிவு மற்றும் சிகிரியா பவ்வ முதலானவற்றை
பார்வையிட முடியும் என்று மத்திய கலாச்சார நிதியம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் உள்நாட்டு வெளிநாட்டு பயணிகளின் வருகை மிக குறைந்த அளவிலேயே காணப்பட்டது.
இருப்பினும் நீண்ட தூரம் இருந்து உள்ளூர் சுற்றுலாப்பயணிகள் வருகை
தந்தமையை காணக்கூடியதாக இருந்ததாகவும் எமது உள்ளூர் ஊடகவியலாளர் தெரிவித்தார்