சம்பந்தர்,சுமந்திரனை தோற்கடிக்க வேண்டும் தமிழர்கள் சபதம்

Spread the love

சம்பந்தர்,சுமந்திரனை தோற்கடிக்க வேண்டும் தமிழர்கள் சபதம்

இலங்கையில் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்க பட்ட தமிழ் தேசிய

கூட்டமைப்பின் நிகழ்கால செயல் பாடுகள் மக்கள் மத்தியில் பெரும் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது

ஐந்து வயதில் இருந்து சிங்கள பகுதியில் வசித்து ,தமிழர்களின் போரியல் வலி தெரியாது வளர்ந்து வந்த சுமந்திரன் கூட்டமைப்பின்

முக்கியஸ்தராக நியமிக்க பட்டதும் ,சிங்கள ஜனாதிபதியின் சட்டத்தரணியாக விளங்கி வருபவருமான சுமந்திரன் தமிழர்களின் பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பார் ..?

மக்கள் கண்ணீருடன் வசித்து வரும் வேளையில் அவர்களது பிரச்சனைகளை தீர்த்து வைக்க மறுத்து தமது பைகளை நிரப்பிய

இந்த வியாபாரிகளை தமிழர்கள் ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும் என்பதே தமிழர்களின் இறுக்கமான நிலைப்பாடாக உள்ளது

நொந்து போயுள்ள தமிழர்களின் நெஞ்சில் வேலால் குற்றியது போன்று சம்பந்தர் ,சுமந்திரன் பேச்சுக்கள்
அமைந்தன

இவ்வாறான துரோக செயல்களை புரிந்து தமிழர்களை இழிவு படுத்தும் இவர்களை விரட்டியடிக்க வேண்டும் என்பதே உலக தமிழர்களின் விருப்பாக உள்ளது

தாயகத்தில் உள்ள தமிழர்களே இந்த செயலை உங்கள் வாக்குகளின் மூலம் இந்த இருவரையும் தோற்கடித்து தகுந்த

தண்டனை வழங்குங்கள் ,அப்பொழுது தான் கூட்டமைப்பை நல்வழி படுத்தி நகர்த்த முடியும் ,இவர்கள் மீண்டும் தேசியத்தின் பெயரால்

வெற்றி பெற வைக்க பட்டால் தமிழர்களை காலில் பூச்சிகள் போல போட்டு மிதிப்பார்கள்

இதை கவனத்தில் கொண்டு இம்முறை இவர்கள் இருவரையும் கூட்டமைப்பில் இருந்து விரட்டியடித்து புதியவர்களை

,இளையவர்களை இணைக்க தமிழர்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே புலம் பெயர் தமிழர்களின் அதிக விருப்பாக உள்ளது

எழுவாய் தமிழா ,வீர செயல் தருவாய் தமிழா ,கயவர்களை வீழ்த்து ,கண்ணியத்தை நாட்டு

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *