கொழும்பு மற்றும் அருகில் உள்ள சில நகரங்களில் தானியங்கி வீதி சமிக்ஞைகள்
கொழும்பு மற்றும் அதனை அண்டிய நகரங்கள் சிலவற்றில் தெரிவு செய்யப்பட்ட வீதிகளில் தானியங்கி வீதி சமிக்ஞை முறை இன்று
காலை 6.00 மணி தொடக்கம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான உத்தேச திட்டமாக முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்தார்.
இந்த வீதிகளில் இதற்கு முன்னர் வாகன சமிக்ஞை நடவடிக்கைகளை பொலிஸாரே கையாண்டனர்.
தானியங்கி வீதி சமிக்ஞை செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட வீதி வாகன நடவடிக்கைளுக்கு பொலிஸாரின் பங்களிப்பு இருக்க
மாட்டாது. இந்த உத்தேச திட்ட நடைமுறை தொடர்பான விடயங்களை பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.