கொரோனா வைரஸ் – அரச வங்கிக்குப் பூட்டு
கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட , மத்துகம-
கொழும்பு சொகுசு பஸ் சாரதி, அகலவத்த பகுதியிலுள்ள அரச வங்கி ஒன்றுக்கு,
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்றுள்ளதையடுத்து, அதனை இன்று (19)
முதல் மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக, அகலவத்த சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேற்படி சாரதி அடங்களாக இந்தப் பகுதியில் இதுவரை தொற்றாளர்களாக மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் அகலவத்த ஓமந்த வீதி, வலவ்வத்த மற்றும் பேரகம ஆகிய
பகுதிகளைச் சேர்ந்தவர்களெனத் தெரிவிக்கப்படுகிறது.