கொரோனா தொற்றாளர்கள் பயணித்த 06 பஸ்கள் கண்டு பிடிப்பு
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் என உறுதிசெய்யப்பட்ட
நபர்கள் பயணித்த 06 பஸ்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் நேற்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்
போக்குவரத்து அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
சொகுசு பஸ்களில் பயணிக்கும் பயணிகளை பஸ்ஸில் ஏற்றுவதற்கு
முன்னர் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போது பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை
குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.