கை கால்கள் வாய் கட்டப்பட்ட நிலையில்சடலம்
கை கால்கள் வாய் கட்டப்பட்ட நிலையில் சடலம் பொலன்னறுவை, மனம்பிட்டிய – கொடலீய பாலத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
லொரியை 30 லட்சம் பேசி வரச்சொல்லி கொலை
லொரியை 30 லட்சம் பேசி வரச்சொல்லி கொலை செய்யப்பட்டதாக தகவல்
கை,கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பொலன்னறுவை – தலுகானை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் எனவும், டிப்பர் லொறி சாரதி எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 17 ஆம் திகதி மாலை, அவரது மனைவி தனது கணவர் வீடு திரும்பவில்லை என பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதற்கமைய, டிப்பர் லொறியில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் தொழில்நுட்ப அமைப்பைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட பரிசோதனையில், மணல் ஏற்றி சென்ற குறித்த லொறி பொலன்னறுவை – மனம்பிட்டிய பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.

பொலன்னறுவை – மைத்திரிபால சுற்றுவட்டத்திற்கு அருகில்
பொலன்னறுவை – மைத்திரிபால சுற்றுவட்டத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், குறித்த லொறி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சாரதியின் சடலம் மனம்பிட்டிய கொடலீய பாலத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களைக் கைதுசெய்ய மனம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல்

- டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு

- பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு அழுத்தம்

- புதிய தாக்குதல் நடத்த ஈரான் அச்சுறுத்தல்

- பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைது

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்

- முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசத்திற்கு பிணை

- கொலை வழக்கில் பிரதான சந்தேக நபர் விளக்கமறியலில்

- முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச ஆணைக்குழுவால் கைது

- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு

- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்

- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு

- வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவை








