கனடாவில் கறுப்பு யூலை-83ஐ நினைவேந்தி குருதிக்கொடை ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Spread the love

கனடாவில் கறுப்பு யூலை-83ஐ நினைவேந்தி குருதிக்கொடை ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

தமிழினத்தின் மீதான திட்டமிட்ட இனப்படுகொலையாக அமைந்த கறுப்பு யூலை-83ஐ நினைவேந்தி குருதிக்கொடை நிகழ்வொன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கனடாவில் ஒருங்கு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ( 23-07-2022) யூலை23ம் நாள் சனிக்கிழமை, மதியம்11:20 மணி முதல் இக்குருத்திக் கொடை நிகழ்வு Richmond Hill பகுதியில் உள்ள Hillcrest Mall , 9350 Yonge St, Richmond Hill, ON L4C 5G2 இந்த மையத்தில் இடம்பெற இருக்கின்றது.

கறுப்பு யூலை-83 இனப்படுகொலையில் கொலையுண்ட உறவுகளை நினைவேந்தி ‘உயிர்கொடுத்தவர்களுக்காய் உதிரம் கொடுப்போம்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெறுகின்ற இருக்கின்றது.

இற்றைக்கு 39 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள பௌத்த இனவாதத்தினால் நடத்தப்பட்ட இந்த இனஅழிப்பினை எந்தக் கட்சி செய்திருந்தாலும், யார்

செய்திருந்தாலும் அது தொடர்பில் விசாரணை நடத்தி தண்டைனை வழங்கப்படும் என ஐ.நாவுக்கு கொடுத்த வாக்குறுதியினை சிறிலங்கா அரசு இன்றுவரை நிறைவேற்றவில்லை.

ஐ.நாவுக்கு கொடுத்த இந்த வாக்குறுதி முதற்கொண்டு இற்றைவரை அனைத்துலக சமூகத்தினை பல்வேறு


வடிவங்களில் சிறிலங்கா அரசு ஏமாற்றியும் நாடகமாடியும் வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

    Leave a Reply