எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் குவிப்பு
எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் குவிப்பு இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் மீளவும் மிகப்பெரும் போர் ஒன்று வெடிக்கும் அபாயம் காணப்படுகிறது .
இந்தியாவின் ஆளுகைக்கு உள்ள பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு குழுக்கள் நடத்திய தாக்குதலில் 22க்கு மேற்பட்டவர்கள் பலியாக இருந்தனர்.
அதனை அடுத்து தற்பொழுது இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் யுத்தம் மூளும் அபாயம் காணப்படுகிறது.
இரு நாட்டு எல்லைகளில் பதட்ட நிலவுவதால் ,இரு நாட்டு இராணுவமும் அந்த எல்லைகள் குவிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
எவ்வளையும் போர் வெடிக்கலாம் என்கின்ற அச்சம் காரணமாக ,மக்கள் எல்லையோரத்தில் அச்சத்தோடு காணப்படுகின்றனர்.
இந்தியாவே வலிந்து பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்த முற்படுவதாக ,பாகிஸ்தான் இராணுவம் மற்றும் அதனுடைய அரசியல்வாதிகள் இப்பொழுது பேச ஆரம்பித்துள்ளனர்.
மீளவும் ஒரு யுத்தம் இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையில் ஆரம்பித்தால் .அதுவே மிகப்பெரும் போராக வெடிக்கும் அபாயம் காணப்படுவதாக சர்வதேச ஆய்வாளர்கள் தமது கண்ணோட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இது மோடி உடைய ஆட்சிக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய போராக இருக்கலாம் என நம்பப்படுகிறது.













