என் காதலை ஏற்று விடு …!
எச்சி ஊறும் உன் அழகை
ஏய் பிடிக்க நான் வரவா ..?
அர்த்தமுள்ள பாசமதை
அள்ளி வந்து தந்திடவா ..?
அழகான மாம்பழமே
அணில் கொத்த போகுதடி
அகிலமே உன் பின்னால்
அடியெடுத்து வைக்குதடி
காற் றுடைக்கும் மெல்லிடையில்
கண் வந்து தாக்குதடி
மூச்சிழுக்கும் உன் அழகில்
முழு உடலும் கொதிக்குதடி
பேரழகை கண்டதினால்
பேச்சு வர மறுக்குதடி
பேரின்பம் நெஞ்சில் வந்து
பேரலையாய் தாக்குதடி
எவர் செய்த சிலையதுவோ
ஏங்க வைத்து போகுதே ..
என் தூக்கம் பறித்தவளே
எனை ஏற்க மாட்டாயா …?
வன்னி மைந்தன் (ஜெகன் )
ஆக்கம் 18-06-2020