உன்னை நீ நம்பு …!

Spread the love

உன்னை நீ நம்பு …!

நீ அழுது பூமி குளிப்பதா – இந்த
நிலையிலே நீயும் தவிப்பதா
உனக்குள் ஏனோ உன்னை புதைத்தாய்
உலகில் ஏனோ உன்னை மறைத்தாய்

எழுந்தின்று பொங்கி விடு
ஏரி மலையாய் கொதித்துவிடு
தடை கண்டு தளராதே
தளர்நது மனம் சோராதே

வெடி குண்டாய் மாறிவிடு
வெடித்தே பகை வென்றுவிடு
உலகேறி நீதி தனை
உயிராய் உயிரே நாட்டிவிடு

வழி வந்த துயர் எல்லாம்
வழி விழுந்தே மறைந்து விடும்
உயிர் வழங்கும் தாயவளாய்
உலகுன்னை போற்றி விடும்

வர லாறை நீ எழுது
வழி காட்டி நீ செல்லு
புத்தகமாய் உன்னை படிக்க
புது விதி செய்து விடு

இறந்தும் நீ வாழ்ந்திருப்பாய்
இதயத்தில் உறைந்திருப்பாய்
அழியா புகழ் ஒன்றை
அகிலத்தில் வைத்திருப்பாய் ….!

வன்னி மைந்தன்
ஆக்கம் 30-01-2022

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *