உன்னால் தவித்தேன் …!

Spread the love

உன்னால் தவித்தேன் …!

ஊர் உறங்கும் வேளையில
உன் மடி நானுறங்க
என்னை நானும் மறந்தேனே
என் உயிரில் மிதந்தேனே

அந்தி வந்து தாலாட்ட
அத்தை மகள் பேச்சிழக்க
உச்சி வானம் வெட்கப்பட்டே
உச்ச இருளை கொட்டிவிடும்

இந்த ஒரு நாளிற்காய்
இத்தனை நாள் தவமிருந்தேன்
இன்றிந்த பொழுதினிலே
இவ் வையம் மறந்திருந்தேன்

எட்டு கால் நண்டாக
என் மேனி கீறலிட
தொட்டு உன்னை மகிழ்ந்தனே
தொட்டா சிணுங்கி ஆனேனே

மூச்சு முட்டி நீ பேச
மூச்சடக்கி நான் கேட்க
வீழ்ந்துடைந்த மொழி எல்லாம்
வீரத்தின் சோடனையோ

உடல் முழுதும் நீர் விழவே
உன் நிக கீறல் வலியெடுக்க
தாங்கி சிரித்தேனே
தாராளம் உன்னை இரசித்தேனே

இது தானே வாழ்வாச்சு
இன்றெங்கும் கலந்தாச்சு
கலையாத இருள் ஒன்றை
கை கூப்பி தொழுதேனே

ஆனாலும் ஏமாற்றம்
ஆதவன் விடியலிட்டான்
அடுத்து வரும் நாளிற்காய்
அடி உன்னாலே அவதியுற்றேன் …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 11-02-2022

    Leave a Reply