ஈராக் அமெரிக்கா ஒயில் நிறுவனங்கள் மீது ஏவுகணை தாக்குதல் – அதிர்ச்சியில் அமெரிக்கா
ஈராக் தெற்கு ,பசாரா பகுதியில் அமைந்துள்ள அமெரிக்காவின் Halliburton’s பிரமாண்ட ஒயில் நிறுவனங்கள் அருகில் மூன்று ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன,
உடனடியாக இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரிய வரவில்லை
இந்த ஏவுகணைகளில் 11 வெடிக்காத நிலையில் உள்ளதாக ஈராக்கிய இராணுவம் தெரிவித்துள்ளது
எனினும் இந்த வெடிக்காத ஏவுகணைகள் தொடர்பாக தகவலின் உண்மை தண்மை அற்ற ஒன்றாக உள்ளதாக நிபுணர்கள் கருத்துரைக்கின்றனர்
ஈராக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் வெளியேற வேண்டும், அது தவறின்
அவர்கள் பெரும் அழிவை சந்திக்க நேரிடும் என ஈரான் வெளிப்படையாக அறிவித்திருந்தது ,
ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறும் நிலையில் இல்லை .
இதனை அடுத்து நேற்று அவசர அவசரமாக ஈரானின் பல டசின் ஏவுகணைகள் மிக
முக்கிய கால்வாய் பகுதியில் நிறுத்த பட்ட பின்னர் இந்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன
இதுவரை இந்த தாக்குதல் தொடர்பில் அமெரிக்காவிடம் இருந்து எவ்வித பதிலும் வெளியாகவில்லை
பிந்திய செய்திகளின் படி பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,
இந்த இழப்புக்களை அமெரிக்கா வழமை போல மூடி மறைக்கும் செயலில் ஈடும் என நம்பலாம்