இலங்கை மனித உரிமையில் மோசமான நாடு – கொதிக்கும் அமைச்சர்கள்

மனித உரிமை
Spread the love

இலங்கை மந்த உரிமையில் மோசமான நாடு – கொதிக்கும் அமைச்சர்கள்

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இலங்கைப் பிரிவான ‘உலக அறிக்கை 2022’ நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைமையை மிகைப்படுத்தப்பட்ட மற்றும் தேவையற்ற எதிர்மறையான வகையில் சித்தரிப்பதாக வெளிநாட்டு அமைச்சு வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் உட்பட சர்வதேச சமூகத்துடன் ஆக்கபூர்வமாக

ஈடுபடுவதற்கான கொள்கையை இலங்கை பின்பற்றுகின்றது. எவ்வாறாயினும், குறிப்பாக சவாலான உலகளாவிய பொருளாதார மற்றும் சமூக சூழலின் போது பரபரப்பான மற்றும் பக்கச்சார்பான அறிக்கையிடல் உள்நாட்டு முரண்பாடுகளை தீவிரப்படுத்தி மோசமான

நிலைமையைத் தோற்றுவிக்கின்றது. பொறுப்பான, சமநிலையான மற்றும் பாரபட்சமற்ற அறிக்கையிடலின் முக்கியத்துவத்தை நாங்கள் முன்னிலைப்படுத்துகின்றோம்.

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட மற்றும் நிறைவேற்றப்பட்ட நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயன்முறையின் மூலம் நிலையான சமாதானத்தை நிலைநாட்டுவதில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற மனித

உரிமைகள் பேரவையில் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். எமது சொந்த அரசியலமைப்பு மற்றும் எமது சர்வதேசக் கடமைகளுக்கு இணங்க மனித உரிமைகளை

மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் இலங்கை தனது நீண்டகால அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

2022 ஜனவரி 18ஆந் திகதி இலங்கைப் பாராளுமன்றத்தின் 9ஆவது கூட்டத் தொடரின் தொடக்கத்தில் அதிமேதகு ஜனாதிபதியினால் அண்மையில் இந்தச் செய்தி மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

இலங்கை அரசாங்கம் பொருளாதார, சமூக மற்றும் மனித அபிவிருத்தி மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைதல் உட்பட அனைத்து துறைகளிலும் தனது ஆணையை நிறைவேற்றுவதில் அதன் மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும். அதே நேரத்தில், கோவிட்-19

தொற்றுநோயால் ஏற்பட்ட செயற்பாட்டு, பொருளாதார மற்றும் மனிதத் தடைகள் இருந்தபோதிலும், இலங்கை மக்களின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் சர்வதேச ரீதியாக வலியுறுத்தப்பட்ட போருக்குப் பிந்தைய நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித

உரிமைகளை வழங்குவதில் அரசாங்கம் முக்கியமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. சுதந்திரமான உள்நாட்டு நிறுவனங்கள், காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீடுகள் அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தேசிய ஒருமைப்பாடு மற்றும்

நல்லிணக்க அலுவலகம் மற்றும் இலங்கையின் நிலைபேறான அபிவிருத்தி சபை ஆகியன இந்த முயற்சிக்கு முக்கிய உறுதுணையாக உள்ளன. இந்த நிறுவனங்களின் சுதந்திரமான சட்டபூர்வ ஆணைகளை நிறைவேற்றுவதற்காக நிதி மற்றும் ஏனைய ஆதரவுடன் நாங்கள் அதிகாரம்

பெற்றுள்ளோம். மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் குறித்த உள்நாட்டு செயன்முறைகளின் மூலம் ஏற்பட்ட முன்னேற்றம் தொடர்பான வழக்கமான புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவையிலான இலங்கையின் அறிக்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கு நாங்கள் அளித்த பதிலில், பயங்கரவாத தடைச் சட்டத்திலான திருத்தம், பொறுப்புக்கூறல், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதிகளை

விடுவித்தல், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், கோவிட் தொற்றுநோய் மற்றும் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் போன்ற பல துறைகள் தொடர்பான சமீபத்திய மாதங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நாங்கள் முன்னிலைப்படுத்தியுள்ளோம்.

சர்வதேச செயற்பாட்டாளர்களைப் பொறுத்தமட்டில், எமது சர்வதேச பங்காளிகளான ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேசத் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நல்லெண்ணம் மற்றும் ஆலோசனைகளை அரசாங்கம் பெரிதும் மதிப்பதாக நாம்

குறிப்பிட்டுள்ளோம். அவர்களுடனான எமது தொடர்ச்சியான தொடர்புகளைத் தொடர்ந்துள்ள அதே வேளையில், இலங்கையுடனான அவர்களது வழக்கமான ஈடுபாட்டையும் ஊக்குவித்துள்ளோம். விஜயங்களை மேற்கொள்ளும் இருதரப்பு உயரதிகாரிகள், ஐக்கிய நாடுகள்

சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் விஷேட ஆணையுடையவர்கள் உட்பட பல பரிமாற்றங்களின் போது, நாம் அனைத்து வகையான உள்நாட்டு உரையாடல்களையும் அணுகுவதற்கு வசதிகளை ஏற்படுத்தி, அவர்களது ஊக்கம்,

ஆலோசனை மற்றும் கரிசனைகளுக்கு திறந்த நிலையில் இடமளித்துள்ளோம். அபிவிருத்தி நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பல விடயங்களில் நிறுவப்பட்ட தொடர்பு மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் எமது உள்நாட்டு சிவில் சமூகப்

பங்காளிகளுடனான எமது தொடர்புகளை நாம் குறிப்பாக மதிக்கின்றோம். நிலையான அபிவிருத்தி இலக்குகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்களை அடைந்து

கொள்வதற்கான எமது முயற்சிகளில் அவர்களை ஈடுபடுத்தியுள்ளோம். ஒரு பரந்த முனையில், நாம் முன்னோக்கிச் செல்லும்போது எம்முடன் பங்காளியாக ஈடுபடுவதற்காக இலங்கையின் புலம்பெயர் குழுக்களுக்கும் நாம் அழிப்பு விடுத்துள்ளோம்.

மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நிலைப்பாடு தொடர்பாக, 2021 செப்டெம்பர் மாத சபை அமர்வில் நாம் குறிப்பிட்டது போல, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பொறிமுறைகள் மற்றும் சபையுடன் இலங்கை தனது நீண்டகால ஒத்துழைப்பைத் தொடரும். உள்நாட்டு

செயன்முறைகள் மற்றும் நிறுவனங்களின் மூலம் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான எமது உறுதிப்பாட்டை நாம் வழங்குகின்றோம். வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் குறிப்பிட்டது போல, ‘எமது சவால்களை ஒப்புக்கொள்வதில் நாங்கள் திறந்த

நிலையில் காணப்படும் அதே வேளை, பொறுப்பான மற்றும் ஜனநாயக அரசாங்கம் என்ற வகையில், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகள், சமாதானம் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான முழு அளவிலான பிரச்சினைகளிலும் உறுதியான முன்னேற்றத்தை

அடைந்து கொள்வதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம்’. தீர்மானம் 46/1 இல் உள்ள சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையானது சபையில் பிளவுக்கு வழிவகுத்தமையானது

தேவையற்றதும், உதவியற்றதும் மற்றும் இலங்கையில் அரசியல்மயமாக்கல் மற்றும் துருவமுனைப்புக்கு வழிவகுக்கும் என இலங்கை கருதுகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *