இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கே. மதிவாணன் அறிவிப்பு

Spread the love

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கே. மதிவாணன் அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக

கே. மதிவாணன் அறிவித்துள்ளார். தற்போதைய நிர்வாகம் வெளிப்படைத்தன்மையுடன்

செயற்படாததன் காரணமாக இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அவர்

நேற்று (29) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்காக உண்மையாக உழைத்த தாம் சமகால

நிர்வாகத்தில் தொடர்ந்தும் மனசாட்சியுடன் செயற்படமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டுக்காக கௌரவமிக்க பணியை ஆற்றக்கூடிய தினம்

உதயமானால் அந்த நாளில் மீண்டும் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள

தயாராகவுள்ளதாகவும் கே.மதிவாணன் அறிக்கையினூடாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *