இலங்கை – காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து

Spread the love

இலங்கை – காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து


வடக்கு மற்றும் கிழக்கினை மையப்படுத்தி இலங்கை மற்றும் காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தினை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும்

பிரதமரின் இணைப்புச்செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமியுடன் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

இரு நாட்டு மீனவர் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு கண்டு, நல்லுறவை வளர்ப்பது தொடர்பாகவும்

இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *