இலங்கையை முன்னேற்ற திருடர்கள் பேச்சு

இலங்கையை முன்னேற்ற திருடர்கள் பேச்சு
Spread the love

இலங்கையை முன்னேற்ற திருடர்கள் பேச்சு

இலங்கையை முதலீட்டாளர்களுக்குப் பொருத்தமான நாடாக மாற்றுவதற்கும், இந்நாட்டிலுள்ள தொழில்முனைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கும்

இலங்கை முதலீட்டுச் சபை தயாரித்துள்ள எதிர்காலத் திட்டங்கள் குறித்து குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை

அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவில் கலந்துரையாடப்பட்டது.

குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழு அதன் தலைவர்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் (20) கூடியபோதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையை முன்னேற்ற திருடர்கள் பேச்சு

*டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதலீட்டாளர்களுக்கு அவசியமான அனுமதியைப் பெற்றுக்கொள்ள தனியான ஒரு இடம்

இவ்வாறாக, தொழில்முனைவு மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில், இலங்கை முதலீட்டுச் சபையின் குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால திட்டங்கள்

குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், தொழிலாளர் சட்டம் மற்றும் ஏனைய சட்டங்கள் தொடர்பாகவும் முதலீட்டுச் சபையின் முன்மொழிவுகள் மற்றும் யோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

அத்துடன், இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் அதனுடன் தொடர்புடைய பங்குதார்களின் கருத்துக்களையும் பெற்றுக் கொண்டு முதலீடுகளை

ஊக்குவிப்பதற்காகத் தயாரிக்கப்பட வேண்டிய நீண்டகாலக் கொள்கைகளைத் தேசிய பேரவைக்குப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இங்கு தெரிவித்தார்.

இந்த உபகுழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னாந்து, கௌரவ சாகர காரியவசம் மற்றும்


இலங்கை முதலீட்டு சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *