இனி என்ன செய்வாய்

Spread the love

இனி என்ன செய்வாய்

பாயும் புலியாய் படை எடு
பகைவன் நடுங்க உருவெடு
அனலது கொதிப்பை நீ கொடு
அகிலம் வியக்க உயிர்ப்பெடு

பொத்துவில் முதல் பொலிகண்டி
பொங்கின தமிழ் தொடர்வண்டி
எவரடா கண்டார் இவ்வண்டி
எழுந்தே ஓடும் தொடர்வண்டி

சரிதம் எழுதிட எழுகிறார்
சரித்திரம் படித்தே வெடிக்கிறார்
வேரை அறுத்ததாய் நினைத்தவர்
வெகுயென எழுச்சியில் துடிக்கிறார்

குருதி குடித்தவன் ஆள்வதோ
குண்டு வெடித்தவன் சிரிப்பதோ
மாண்டவர் கனவு மாள்வதோ
மடையனாய் தமிழன் வாழ்வதோ

கொன்றவன் ஆட்சியில் விடுதலை
கொடி நாட்டு உலகில் முன்னிலை
இனமது அழித்தால் இதுவரும்
இனியெனும் உணரட்டும் சிங்களம்

வன்னி மைந்தன்
ஆக்கம் 08-02-2021
பொத்துவில் முதல் பொலிகண்டி
வரலாற்று பேர் எழுச்சி கண்டு

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply