இனிய அகவை வாழ்த்துக்கள் ..!
நெஞ்சுக்கு நேர் நின்ற பேரழகன் – இவன்
நேசத்தில் எனை குழைத்த பெரும் முதல்வன்
அன்புக்குள் அறம் வைத்த அவையழகன்
ஆண்டுகள் பல்லாண்டு தொடர்கின்றவன்
இல்லத்தில் எனை யழைத்து உணவழித்தவன்
இதயத்தில் எனக்கோர் இடம் வைத்தவன்
பழகிய நட்பில் முதலானவன்
பகை வந்த போதிலும் விலகாதவன்
உயிரிலும் மேலான உறவானவன்
உறவுக்குள் உறவாகி உலர்கின்றவன்
இள வேனில் காலத்தில் தொடரானவன்
இன்றென்ன வியப்பு நெஞ்சில் இருக்கின்றவன்
முருக தாசு முனை யானவன்
முன் அள்ளி உதவிடும் திறனானவன்
மூப்பிலும் நீ இன்று அழகானவன்
முன் விழி வீச்சு ஒளியானவன்
இன்றுந்தன் அகவையில் வாழ்த்துகிறேன்
இன்று போல் வாழ்ந்திட போற்றுகிறேன்
உன் போல உறவொன்றை காணவில்லை
உயிராகி வாழ்கிறாய் பேதமில்லை …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 13-02-2022