இங்கிலாந்து அரசுக்கு எதிரான சட்ட போர் – உருத்திரகுமார் பகிரங்க அறிவிப்பு

Spread the love

இங்கிலாந்து நாட்டில் தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான தடை விடயம் நீதிமன்றத்தில் தொடந்து இழுபறி பட்டு செல்லும் நிலையிலும் ,நீதிமன்றங்கள் பிரிட்டன் பாரளுமன்ற அரச விதிகளை

மதிக்காது செயல் பட்டு செல்வதான குற்ற சாட்டை நாடு கடத்த அரசாங்கத்தின் தலைவர் உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்

பிரிட்டன் பாரளுமன்றில் விவாதம்

அதனால் இது விடயம் தொடர்பாக பிரிட்டன் பாராளுமன்றில் கட்சிகள் விவாதத்திற்கு இதனை எடுத்து செல்ல உள்ளதாகவும்

,அதற்காக எழுபதுக்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை இணைத்து இதற்கு குரல் கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார்

தமிழர் நகர்வு

மேலும் தமிழர்கள் தமது எம்பிகளை சந்தித்து தமிழருக்கான ஆதரவினை கோர வேண்டும் எனவும் ,தமிழர் ஒரு நிலையான

அரசியல் சக்தியாக மாற்றம் பெற தமிழர்கள் முன்வந்து உழைக்க வேண்டும் என்ற வரலாற்று முக்கியத்துவ வாய்ந்த விடயத்தையும் தெரிவித்துள்ளார்

புலிகள்-பிரிட்டன்

எதிர்வரும் சில வாரங்களில் புலிகள் தடையும் ,பிரிட்டன் நிலையும் எவ்வாறு இருக்க போகிறது என்பதும் ,இதன் பின்னால் பிரிட்டன்

தமிழர் தரப்பு நிலைப் பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதையும் இந்த நகர்வுகள் கட்டியம் இடுகின்றன

தமிழர் எழுச்சி

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி போல ,சிங்கள அரசு புரிந்த இந்த விடயத்தின் பின்னால் தமிழர்கள் ஒன்று பட்டு

லண்டனில் எழுச்சி கொள்ளும் நிலையை இது உருவாக்க போகிறது என்பதே இன்றைய நிலையாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *