அக்டோபரில் கொரோனா இரண்டாவது அலை- மக்களுக்கு எச்சரிக்கை

Spread the love

அக்டோபரில் கொரோனா இரண்டாவது அலை- மக்களுக்கு எச்சரிக்கை

நாம் பாதுகாப்பாக இல்லாமல் மெத்தனமாக இருந்தால் அக்டோபரில் கொரோனா இரண்டாவது அலை வருவதை யாராலும்

தடுக்க முடியாது என்று தமிழக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் திருவேற்காடு நகராட்சியில் கட்டப்பட்ட புதிய நகராட்சி கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனை அமைச்சர்

பாண்டியராஜன் நேற்று ஆய்வு செய்தார். மேலும் நகராட்சிக்கு குப்பைகளை அள்ளும் பேட்டரி வாகனங்கள் மற்றும் 2

பூங்காக்களையும் அவர் திறந்துவைத்தார்.அமைச்சர் பாண்டியராஜன் இதனை நேற்று ஆய்வு செய்தார்

பின்னர் அமைச்சர் பாண்டியராஜன் நிருபர்களிடம் தெரிவிக்கையில் நாம் பாதுகாப்பாக இருந்து கொண்டால் கொரோனாவின் 2-வது அலை வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால்

நாம் மெத்தனமாக இருந்துவிட்டால் அக்டோபரில் கொரோனாவின் இரண்டாவது அலை வருவதை யாராலும் தடுக்க முடியாது.

கொரோனாவை விரட்டி அடிக்கும் பணியில் தமிழகம் முன்னணியில் உள்ளது என்று குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆர். தோற்றத்தில் நடிகர் விஜயை அவரது ரசிகர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் சுவரொட்டியாக ஒட்டி உள்ளனர். அதில் நான் கருத்து சொல்ல முடியாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போல் அவர்

இருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் இவ்வாறு ஒட்டி உள்ளனர். அது வரவேற்க தகுந்த விஷயம் என கருதுகிறேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரை சொல்லி அவர்கள் ஓட்டு கேட்டு போகாத

வரை எந்த பிரச்சினையும் இல்லை. ஏனென்றால் அவர்களின் பெயரை சொல்லி ஓட்டு கேட்கும் உரிமை எங்களுக்கு தான் உள்ளது என்றும் தமிழக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *