வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வில் இராணுவம்: பீதியில் இளைஞர், யுவதிகள் photo

Spread the love

வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வில் இராணுவம்: பீதியில் இளைஞர், யுவதிகள் photo

ஒரு இலட்சம்  பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான நேர்முகத் தேர்வில் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புதிய அரசினால் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத்தேர்வுகள் அனைத்து பிரதேச செயலகங்களிலும் இன்று

காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் வவுனியா மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் இவ்வேலை வாய்ப்புக்களுக்கு விண்ணப்பத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த நேர்முக தேர்வில் விண்ணப்பதாரிகளை நேர்முகம் காண்பதற்காக அரச உத்தியோகத்தருடன், இரண்டு

இராணுவ வீரர்களும் இணைக்கப்பட்டுள்ளளனர். வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 890 பேர் விண்ணப்பிக்கப்பட்ட நிலையில்

ஐந்து கிராம சேவகர் பிரிவிற்கான நேர்முக தேர்வுகள் இன்று உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர்

மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் இராணுவத்தினரின் பிரசன்னத்துடன் இடம்பெறுகின்றது.

இவ்வாறு அரச உத்தியோகத்தர்களுடன் இராணுவத்தினரை நேர்முகத் தேர்வ்கு இணைந்துக்கொண்டமை தொடர்பில் சமூக ஆர்வலகர்கள் பலரும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

வேலைவாய்ப்பு நேர்முகத்
வேலைவாய்ப்பு நேர்முகத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *