விழியை மூடு உயிர் வாழ்வாய் …!
கண்ணில் உலகை
கண்ணே வைத்து …
கண்ணீரோடு
கண்ணே நனைவாய் ….
பொய்யாம் உலகின்
பொறியில் எரிந்து …
வீழ்ந்து அழுவாய்
விழியை மூடு …
கண்ணை குற்றி
கதிரை பறித்து ….
குருடாய் உன்னை
குற்றி எறிவார் …
விழித்து பார்த்தால்
விவரம் கேட்பார் …
விழியை மூடு
விசில் அடித்து அலைவார் ….
உலகம் போற போக்கில் இன்று
உற்று பார்த்தல் உலகில் பிழையாம் ..
உண்மை கசக்கும் விழியை மூடு
உலகில் கொஞ்சம் நீயும் வாழ்வாய் …!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -04/06/2019