யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவராக அங்கஜன் இராமநாதன் நியமனம்

Spread the love

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவராக அங்கஜன் இராமநாதன் நியமனம்

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.

கண்டி, மகுல்மடுவவில் இந்நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. நிகழ்வில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர்களுக்கான

நியமனங்கள் முதலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கி வைக்கப்படுகின்றன.

யாழ். மாவட்டத்திற்கு அங்கஜன் ராமநாதனும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு டக்ளஸ் தேவானந்தாவும் வவுனியாவிற்கு

கே.திலீபனும், வவுனியா மற்றும் முல்லைத்தீவிற்கு கே.காதர் மஸ்தானும், அம்பாறை மாவட்டத்திற்கு வீரசிங்கமும்,

திருகோணமலை மாவட்டத்திற்கு கபில அத்துகோரலவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய ஏனைய மாவட்டங்களுக்கான மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களாக

கொழும்பு – பிரதீப் உதுகொட

கம்பஹா மாவட்டம் – சமன் பிரதீப் விதான

களுத்துறை – சஞ்சீவ எதிரிமான்ன

கண்டி – வசந்த யாப்பா பண்டார

மாத்தளை – எஸ். நாமக்க பண்டார

நுவரெலியா – எஸ். பி. திசாநாயக்க

காலி – சம்பத் அத்துகோரள

மாத்தறை – நிபுண ரணவக்க

ஹம்பாந்தோட்டை – உபுல் கலப்பத்தி

யாழ்ப்பாணம் – அங்கஜன் இராமநாதன்

கிளிநொச்சி – டக்ளஸ் தேவாநந்தா

வவுனியா – கே. திலீபன்

மன்னார் மற்றும் முல்லைத்தீவு – காதர் மஸ்தான்

அம்பாறை – டி. வீரசிங்க

திருகோணமலை – கபில அத்துகோரள

குருநாகல் – குணபால ரத்னசேகர

புத்தளம் – அசோக பிரியந்த

அநுராதபுரம் – எச். நந்தசேன

பொலன்னறுவை – அமரகீர்த்தி அத்துகோரள

பதுளை – சுதர்ஷன தெனிபிட்டிய

மொனராகலை – குமாரசிறி ரத்நாயக்க

இரத்தினபுரி – அகில எல்லாவல

கேகாலை – திருமதி ராஜிகா விக்ரமசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *