மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர்பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர்பலி யாகியுள்ளதாக காவல்துறை தெரிவிக்கின்றனர்.
வாகரைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று மோட்டார் சைக்கிளில் ஆறு நண்பர்கள் கிண்ணியாவுக்கு சென்று ஓட்டமாவடி பகுதியில் நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது, விபத்தில் சீக்கி இருவர் மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதி வேகமாக மோட்டார் சைக்கிளை இவர்கள் ஒட்டி சென்றதன் காரணத்தினால் ,இந்த விபத்தில் அவர்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்கள் முஸ்லிம் வாலிபர்கள் என தெரிய வருகிறது.
19 வயதுடைய இரு இளைஞர்களும் இந்த வீதி விபத்தில் மரணம் ஆகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணமடைந்த இரண்டு வாலிபர்களும் கூடிய சடலங்கள் ஜனசகா வாகரை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு,
பின்னர் சடல பரிசோதனைக்காக நள்ளிரவு 2 மணியளவில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் வீதி விபத்துக்கள் ,நாள்தோறும் 7க்கு மேற்பட்டவர்கள் பலியாகி வருவதான புள்ளி விவரங்கள் தெரிவித்திருந்தது.
அதிகரித்து செல்லும் வீதி விபத்திற்கு காரணம் யார் ,ஆளும் அரசு காவல்துறை என்ன செய்து கொண்டுள்ளார்கள் ..?அப்படி என்றால் யார் மீது பிழை..?
இவ்வாறு கேள்வி மேல் கேள்விகளாக தொடுக்கப்படுகிற பொழுதும் ஆளுகின்ற அரசு அதிகாரங்கள் பதில் சொல்ல மறுத்து வருகின்றமே மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருக்கும்.













