முல்லைத்தீவில் சிறுவன்உட்பட இருவர் பலி
முல்லைத்தீவில் சிறுவன்உட்பட இருவர் பலி முல்லைத்தீவில் 10 வயதுடைய சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்தமை அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உடுப்புக்குளத்தில் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்ற இருவர் உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (01) அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதி
முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில் உள்ள குளத்தில் இருவர் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்றவேளை தோணி கவிழ்ந்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை
இதன்போது தோணியில் இருந்த இருவரும் நீரிற்குள் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் அளம்பில் தெற்கில் வசிக்கும் 10 வயதுடைய சி.பிரணவன், 25 வயதுடைய இ.நிஷாந்தன் எனும் இருவரே உயிரிழந்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதே நேரம் ஞாயிற்றுக்கிழமை (01) பிற்பகல் குமுழமுனை ஆலய கேணியை பார்வையிட சென்ற இரு மாணவிகள் கேணியில் தவறி வீழ்ந்து உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்








