பொலிஸ் மக்கள் மோதல் – 14 பேர் கைது

Spread the love

பொலிஸ் மக்கள் மோதல் – 14 பேர் கைது

அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இடையில் நேற்று (16) பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டது.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸ் நிலையத்தின் மீது கல்வீச்சை மேற்கொண்டனர்.

இதனை அடுத்து பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர்.

அண்மையில் அங்குலான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான

சாட்சியாளர்கள் இருவர் நேற்று காலை 5 மணி அளவில் பொலிஸ் அதிகாரிகள் சிலரினால் ஜீப் ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்டதை

அடுத்து பொலிஸ் நிலையத்தின் முன்னால் பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் நேற்று கட்டுக்கடங்காத முறையில் நடந்து கொண்ட 9 பெண்கள்

உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சம்பவத்தில் 8 பொலிஸார் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *