யாழில் பொதுமகனை தாக்கிய போலீஸ் அதிகாரி பணி நீக்கம்
பொதுமகனை தாக்கிய போலீஸ் அதிகாரி பணி நீக்கம் ,யாழ்ப்பாணம் பரித்துறை பகுதியில் காவல்துறையால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மிக கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டில் அடிப்படையில் ,
அந்த தாக்குதலை மேற்கொண்ட இரண்டு போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ,பருத்துறை காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளான நபர் நீதிமன்றத்தில் தனக்கு இடம்பெற்ற சம்பவங்களை தெரிவித்ததை அடுத்து,
போலீசார் நடத்திய விசாரணையில் ஒருவர் குடிபோதையில் இருந்ததாகவும், மற்றவர் அங்கிருந்து போலியோ நிலையில் இருவரையும் பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஊழலில் கொழுத்து பெருத்து விளங்கும் காவல்துறையினர் இவ்வாறான சம்பவங்கள் ஈடுபட்டு வருவதும் ,தவறான அத்துமிரல் அடக்குமுறை அதிகார துஷ்பிரயோகத்தை மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கை தொடர்பினை இந்த சமூகம் மிகவும் எடுத்துக்காட்டி உள்ளது.
வாகனங்களில் பயணிப்பவர்களின் கார்களுக்குள் வண்டிகளுக்குள் கஞ்சாவை வைத்து மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார் உடைய வீடியோக்கள் தற்பொழுது காணப்பட்ட நிலையிலும் ,
அவை வைரல் ஆகி வருகின்ற நிலையில் தற்போது இந்த போலீசாரின் இந்த தாக்குதல் சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
சட்டம் ஒழுங்கை மதிக்க வேண்டிய காவல்துறை சந்தேக நபர்கள் மீது போலீஸ் நிலையத்தில் வைத்து தாக்குதல் நடத்துவதும், குடிபோதையில் அவர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற சம்பவங்கள் தொடர்கின்ற அவலத்தை இவை எடுத்துக் காட்டி இருக்கின்றதே.
பொலிஸார் பணியில் ஈடுபடுகின்ற பொழுது வெற்றிலைகள் போடுவதற்கும் தடை விதிக்கப்படுவதாக ,நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ,
தற்பொழுது மதுபானத்தை அருந்தி விட்டு கடமையில் ஈடுபடுவது எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் என்கின்ற கேள்வியை மக்கள் மன்றம் எழுப்பி நிற்கின்றது.












