பாரிய விபத்து 12பேர் காயம்
பாரிய விபத்து 12பேர் காயம் அக்குருஷ பிரதான வீதியில் நிறுத்தி வைக்க பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் வான் மோதியதில் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தை ஏற்பட்ட பொழுதுவேனில் பயணித்த 12 பேர் காயம் அடைந்து அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பேரூந்தில் பயணித்தவர்கள் முல்லட்டியான பகுதியைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
சாரதியின் அலட்சியப் போக்கின் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகின்றது.
காயம் அடைந்தவர்கள் யாவரும் அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்படி லொறி வான் விபத்து தொடர்பான விசாரணைகளை தற்பொழுது இலங்கை காவல்துறை ஆரம்பித்துள்ளனர்.
பாதுகாப்பற்ற வீதியில் இந்த வான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அதை கண்காணிக்க முடியாத நிலையில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் இவ்வாறான விபத்துக்களை தடுக்க முடியாது இலங்கை காவல்துறை திணறி வருவதுடன், மக்கள் வாகனங்களில் பயணம் செல்லவே அச்சம் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- ஜப்பான் 2.66 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி

- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது

- லஞ்சக் குற்றச்சாட்டுசுகாதார அமைச்சகத்தின் தலைமை சட்ட அதிகாரி கைது

- இலங்கையில் உணவுக்கு தட்டு பாடு

- கபில சந்திரசேனவின் மனைவி மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது

- அரசுக்கு எதிராக மிக பெரும் போராட்டம்

- ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை அரசாங்கம் அரசியல்மயமாக்குவதாக நாமல்

- கியூஆர் நடைமுறையில் இருக்கும் அனுரா அரசு

- 10 நாய்கள் விஷம் வைத்து கொலை

- இலங்கை தழுவிய ‘அமைதிக்கான நடைப்பயணம்’ முயற்சிக்கு ஜனாதிபதி ஆதரவு









