
பஸ் விபத்தில் பலர் காயம்
பஸ் விபத்தில் பலர் காயம்கொழும்பு-புத்தளம் வீதியில் பட்டுலுஓயா பகுதியில் திங்கட்கிழமை (17) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்த நிலையில், சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆராச்சிகட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
நிக்கவெரட்டியவிலிருந்து அதிகம மற்றும் கீரியன்கல்லிய வழியாக கொழும்புக்கு தினமும் இயக்கப்படும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஒன்று, பாதையை விட்டு விலகி ஒரு மரத்தில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உட்பட பலர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.