பயணிகள் பேரூந்து நேரெதிர் மோதல் 20 பேர் காயம்

Spread the love

பயணிகள் பேரூந்து நேரெதிர் மோதல் 20 பேர் காயம்

திருகோணமலை, தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 2 பயணிகள் பஸ் மோதி

விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 20 மேற்பட்டோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று (06) அதிகாலை தம்பலாகாமம் 99 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர் என்றும், சடலம் தம்பலாகாமம் வைத்தியசாலையின் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பிலிருந்து சென்ற தனியார் பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுமே

இவ்வாறு மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ்ஸில் தனியார் பஸ் மோதியதினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பயணிகள் பேரூந்து நேரெதிர்
பயணிகள் பேரூந்து நேரெதிர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *