நூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள்
விண் பாடும் பேரழகே
வித்தக தமிழ் அழகே ….
முத்தாகி உனை ஈன்றாள்
மூழ்கித்த மகிழ் வழகே..
இத் திங்கள் கருவுடைத்த
இந்நாளின் பிறப்பழகே….
முந்தி தமிழ் அவை ஆழ
முந்தி விதை இட்டவரே ….
வெள்ளையர் மா நகரம்
வெறி கொண்ட எழில் அழகா …
கை கட்டி அவர் நிற்க – பொங்கும்
கரகோஷ அதிர்வழகா
பைந்தமிழ் உயர் வழகா
பாரில் பொது மொழியழகா …
பா உனை பாடாது
பா முனை தூங்குமோ ..?
நூறாண்டு நீ ஆண்டு
நூலாகி விழ வேண்டும் …
ஆறாகும் விழி நீரில்
ஐயா நீ வாழ்வாய் காண்…!
-வன்னி மைந்தன் -(ஜெகன் )
ஆக்கம் -18-01-2018
லண்டன் – கரோ கவுன்சிலை
ஆளும் ஈழ தமிழன் லண்டன் பாபாவின்
பிறந்த நாளில் ,,என் மகிழ்வு பொங்கல் ..!
வன்னி மைந்தன் கவிதைகள்